Friday, June 13, 2008

சில்லென்ற தீப்பொறி - தித்திக்குதே

தீ சுடும் என்றுதானே கேள்விபட்டிருக்கிறோம்.
ஆனால் இங்கு சிலு சிலுவென்று குளு குளுவென்று இருக்கிறதாம்..
இந்த மாயம் எப்படி நேர்ந்தது?
அதுதான் காதலின் கைங்கரியம்..


இதோ பாடல் வரிகள் ...

திரைப்படம்: தித்திக்குதே
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குழு குழு குழுவென
சர சரவென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?
இது உன் காதலன் என்று
வீறு வீறு விருவென கல கலவென
அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா?
உன் மெததையில் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்ணுதே
உன் ஆடைகள் நான் சூடினேன் என்னன்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே... (2)
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நானான நானா (2)

(சில்லென்ற தீப்பொறி...)

கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தோய்வதும்
கண்ணா உன் கால் உரை உள்ளே என் கைகள் நான் தோய்பதும்
உள்ளூர தேன் பாய்வதும்
உயிரொடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஒ..
தித்திக்குதே... தித்திக்குதே... (2)

அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும் பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சூடும் தூரங்களில் சுவாசங்களும் ஒ..
தித்திக்குதே... தித்திக்குதே... (2)
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நானான நானா (2)

No comments: