சில பாடல்களுக்கு முகவரி தேவையில்லை. கேட்டவுடன் காரணம் தெரியாமல் மனதை கொள்ளையடித்து விடும். அது போன்ற பாடலில் இதுவும் ஒன்று. காரணம் வித்யாசாகரின் துடிப்பான இசையா? இனிமையான சித்ராவின் குரலா?அற்புதமான நடனங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் காட்சியா? நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
பாடல் வரிகள்
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (2)
கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காதில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒதுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில்...)
கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
காதை இறந்து விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைத்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்தது விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
(ராதை மனதில்...)
கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியதும் கண்ணன் இல்லை வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காதில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியாய் எங்கு கண்டு பிடிப்பாள்
விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கை நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
(ராதை மனதில்...)
1 comment:
இந்த இனிய பாடலை எழுதிய வைரமுத்தின் பெயரை ஏன் மறந்து விட்டீர்கள்.தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
Post a Comment