Monday, April 12, 2010

என் காதல் சொல்ல நேரம் இல்லை - பையா

சில பாடல் கேட்டவுடன் மனதை கரைத்துவிடும்.
அப்படி ஒரு பாடல் தான் இது. கேட்டுப்பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.




பாடல் வரிகள்:

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி


உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி


உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்


ஏய் ஹாய் எ
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி


சரணம் 1


காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே


காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி


உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்
ஹ்ம்ம் ..ஹீ


சரணம் 2


ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே


யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே


என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்



என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி


உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

Tuesday, February 17, 2009

உன் நெஞ்சை தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா

சில பாடல் நமக்கு அவ்வளவாக பிடிக்காது.
ஆனால் திடீரென்று கேட்க்கும்பொழுது சில காரணங்களால், நமக்கு மிகவும் பிடித்து விடும். இந்த பாடலும் அப்படிதான்..
நீங்க என்னா நெனைக்கிறீங்க?

சில காரணங்களால் படத்தில் இடம் பெறாமல் போன ஒரு நல்ல பாடல்.

பாடல் வரிகள்

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

தண்ணி குள்ளே முக்குளிச்சு
முத்து ஒண்ணு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலில சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குதம்மா
சாமியும் தான் இருக்கு இங்கே
வேடிக்கை தான் நடக்குதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா ?

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

தாகதிலே சிப்பி ஒண்ணு
தண்ணிக் குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர் குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பளைங்க இங்கில்லையா
ஆயிரமும் உனக்கிணையா?
எனக்கு அது வழிதுணையா?
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலை சொல்லு

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

Monday, February 2, 2009

கோடான கோடி - சரோஜா

சில பாடல் கேட்க்கும் போதே மனசில் பச்சக் என ஒட்டி கொண்டு விடும்.
சில பாடல் கேட்டால் சாதாரணமாக இருக்கும்.
படம் பார்த்தவுடன் அது நம்மை கவர்ந்து விடும்.

பாடல் கவர்வதற்கு பல காரணங்கள்.
சில சமயம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இசை.
மனதை வருடும் வரிகள்.
ரம்மியமான குரல்.
இப்படி பல.

இந்த பாடலும் அப்படி தான்.
அருமையான இசை.
மனதை கொள்ளை கொள்ளும் முஹம்மது அஸ்லாமின் குரல்.
நளினமான நடனம்.

இதோ கேட்டு மகிழுங்கள்.





பாடல் வரிகள்

F: கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
M: குஷியாகும் Body அட இது போல் வருமாடி
M: ஒய்யாரி
F: ஏ அசந்து புடி
M: சிங்காரி
F: நீ அழுத்தி புடி
M: கொடியேத்தி
F: தூக்கி புடி இனி ரூட்ட கொஞ்சம் மாத்து

humming

F: கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
M: குஷியாகும் Body அட இது போல் வருமாடி


F: குத்தாலத்து ஊத காத்து கூத்தாடுது நேரம் பார்த்து
இப்போ சுதி ஏறுது தன்னாலே

M: அம்மாடி உன் ஆட்டம் பார்த்து நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்போ வழி மாறுது உன்னாலே

ஏதோ தோணுது எதுவோ நோகுது உன்ன பார்த்ததாலே
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததாலே

F: விடாத இந்த மோகம் வேகம்
தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்-ன்னு அடிக்கிற மனசு
வவ்வாலை போல பாயும்
வராதது வந்தாச்சுடா கொண்டாலாம் இனி நம்ம நேரம் தானே

humming...


F: துட்டாலே நீ கட்டி போடு
தூங்காம தான் கானா பாடு
விட்டால் இது வித வித விளையாட்டு

எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏன்டா
இப்போ சுகம் தொட்டா விடுமாடா

M: காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழ
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு

F: பொண்ணால மாலை எப்போதும் போல
நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கொண்டாடவேண்டும்
விடாத கொஞ்சம் gap-pu
எல்லாருக்கும் நல்லாருக்கும் fullarukkum இனி நம்ம நேரம்-தானே

F: கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
M: குஷியாகும் Body அட இது போல் வருமாடி
M: ஒய்யாரி
F: ஏ அசந்து புடி
M: சிங்காரி
F: நீ அழுத்தி புடி
M: கொடியேத்தி
F: தூக்கி புடி இனி ரூட்ட கொஞ்சம் மாத்து

Wednesday, January 14, 2009

இப்பவே இப்பவே - ராமன் தேடிய சீதை

ஒருவர் மேல் கொள்ளும் அளவு கடந்த பிரியம் தான் காதலாக மலரும். அந்த பிரியமானவருடன் செலவிடும் ஒவ்வொரு கணங்களும் தென்றல் வருடுவது போல் சுகமானவை.

அப்படி மனம் கவர்ந்தவர் சிறிது நேரம் பிரிந்தாலும் அந்த நேரங்கள் கொடுமையானவை. அவரை இந்த கணமே பார்த்து விட மாட்டோமா என மனது ஏங்கும். அந்த வலியை அருமையாக எடுத்து இயம்பும் பாடல் இதோ உங்களுக்காக.



Tuesday, November 18, 2008

பூ வாடை காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை

அருமையான பாடல்.
இனிய வரிகள்.
ரசித்து மகிழுங்கள்.

Friday, October 24, 2008

மேகம் கருக்குது - குஷி

மழை இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு அருட்கொடை.
மழை பெய்யும் அழகை நாள் பூராவும் பார்த்தாலும் திகட்டாது. அப்படி அதை ரசிப்பது எனது ஒரு இனிய பொழுது போக்கு.
ரசிப்பதே சுகம் என்றால் அதில் நனைவது.. அட அட..

பள்ளி பருவத்தில் மழையில் நனைந்து வரும் என்னை காணும் என் தாய் ..
"என்ன பையன் இவன். மழை பெய்தால் எங்காவது ஒதுங்க தெரியாது. அப்படி அவசரம் என்றால் வேகமாக ஓடியாவது வரலாமே. ஏன் இப்படி தொப்பல் தொப்பலாக நனைந்து வருகிறான்" என்று வருத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு அப்பொழுது தெரியாது நான் வேணும் என்றுதான் அப்படி நனைந்து வந்தேன் என்று. கால போக்கில் அதை உணர்ந்து, மழையில் நனையும் பொழுதெல்லாம் "டேய் சீக்கிரம் வாடா. ஜுரம் வந்து தொலைக்க போவுது" என்று சொல்வார்கள்.

அப்படி மழையில் நனையும் பொழுது தோன்றும் இனிய கற்பனைகள்தான் இந்த பாடல். ஹரிணியின் இனிய குரலில் ஜோதிகா அனுபவித்து ஆடும் பாடல் இதோ உங்களுக்காக..

ஆமாம் இப்படி மழையில் நனைபவரா நீங்கள்.. அப்படி என்றால், உங்கள் எண்ணத்தை இங்கு பதிவு செய்யுங்கள்.

பாடல் வரிகள்

மேகம் கருக்குது
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்,
வானவில் கொடியில், என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது
மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே

நிலாவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோட குளிப்பது சுகம் அல்லவா?
உன் கரையை சலவை செய்து விட வா

புறாவே வா வா வா,
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இதம் தரவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா?

காற்றைபோலே எனக்கு கூட,
சிறகொன்றும் கிடையாது
தரை மேல செல்லும் போது
சிறை செய்ய முடியாது

இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருப்பது ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்..

கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பறப்பு
என் அழகை பறந்து பறந்து பறப்பு

பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால்தான் ரெண்டாம் நிலவாய்
நான் வந்தேன் இப்போது
பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்து கொள்வேன்
விடிகிற போது விடிகிற போது
வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன், ஹோய்...

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது
மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே
மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

Friday, October 10, 2008

பொன் வானம் - இன்று நீ நாளை நான்

தனிமை கொடுமையானது. அதிலும் இளமையில் தனிமை மிகவும் கொடுமையானது. எல்லாம் இருந்தும் சூழ்நிலையின் கைதியாக விதவையாக வாழும் பெண்ணின் என்ன ஓட்டங்கள் தான் இந்த பாடல்.

அருமையான மழையின் பின்னணி இசையோடு , ஒரு பெண்ணின் ஏக்கத்தை அழாகாக தன் குரலில் கொண்டு வந்து ஜானகி பாடும் இனிய கீதம். "தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ" என்று கேட்கும்பொழுதே அந்த சோகம் நம்மில் தொற்றிக்கொல்லுகிறது.


பாடல் வரிகள்

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா...