Wednesday, July 23, 2008

செம்பூவே - சிறைச்சாலை

அருமையான பாடல்.
விடியல் காலையில் எடுத்தது போல் லைட்டிங்..
தபுவின் அழகை அப்பற்றமாக பறை சாற்றும் இனிய காட்சிகள்...
மனதை கவரும் எஸ் பி பாலா மற்றும் சித்ராவின் குரல்....
தெளிந்த நீரோடை போன்ற இளையராஜாவின் இசை.....
வேறு என்ன வேண்டும் ஒரு பாடலை ரசிப்பதற்கு?



.

என்னை காணவில்லையே - காதல் தேசம்

காதலில் தன்னை தொலைத்தவர்கள் பலர். ஆனால் இங்கு இவருக்கு தன் காதலியை கண்டதால் தன்னுடைய உயிரே இவருக்கு தொலைந்து போனதாம்.

தன்னுடையை பரிதாபகரமான நிலையை கூறுகிறார் கேழுங்கள். காதலியின் பெயரை சொல்லியே இவர் உணவு கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன் என்று சொல்கிறார்.மேலும் தன்னை விரும்பாவிட்டாலும், பொய்யாவது சொல் என்று கேட்கிறார். ஏனென்றால் அது இல்லை என்றால் இவர் உயிர் இவரை விட்டு பிரிந்து விடுமாம்.

மனதை கவ்வும் பாடல்



பாடல் வரிகள்:

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தாள்... வாழ்வேன் நான்

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்ட கூடும்
கண்ணே நாம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான் (என்னை காண)

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச்சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால் (என்னை காண)

Monday, July 21, 2008

மழை வருது - ராஜா கையை வச்சா

மழை வந்தால் அதிலிருந்து பாதுகாக்க சரியான குடை தேவை என்பது தானே சரி.

ஆனால் இங்கு இவருக்கு காதலியின் மெல்லிய மாராப்பு போதுமாம்..
காதலிக்கோ வெயிலிலிருந்து பாதுகாவல் தேட காதலனின் பேரன்பால் ஆனா நிழல் வேண்டுமாம்.

காதலில் ஏதோ பிதற்றுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்..
"காதலில் பிதற்றலும் ஒரு அழகிய கவிதை தான்"




Friday, July 11, 2008

மலரே மௌளனமா - கர்ணா

"நீ பாதி. நான் பாதி.. " என்பர் காதல் கொண்டோர். ஆனால் இங்கு பாதி உயிரில் வாழ்ந்ததாகவும் மீதி உயிர் காதலனை கண்ட பிறகே இங்கு இவருக்கு வந்ததாகவும் இவர் கூறுகிறார். இதுதான் காதலின் உச்சமோ?

மெலடி பாடல்களின் எண்ணிக்கை குறைந்த காலத்தில் வந்த அருமையான பாடல். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.





பாடல் வரிகள்:
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்: வாலி
இசை: வித்யா சாகர்

மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே

(மலரே)