காதலில் தன்னை தொலைத்தவர்கள் பலர். ஆனால் இங்கு இவருக்கு தன் காதலியை கண்டதால் தன்னுடைய உயிரே இவருக்கு தொலைந்து போனதாம்.
தன்னுடையை பரிதாபகரமான நிலையை கூறுகிறார் கேழுங்கள். காதலியின் பெயரை சொல்லியே இவர் உணவு கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன் என்று சொல்கிறார்.மேலும் தன்னை விரும்பாவிட்டாலும், பொய்யாவது சொல் என்று கேட்கிறார். ஏனென்றால் அது இல்லை என்றால் இவர் உயிர் இவரை விட்டு பிரிந்து விடுமாம்.
மனதை கவ்வும் பாடல்
பாடல் வரிகள்:
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தாள்... வாழ்வேன் நான்
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்ட கூடும்
கண்ணே நாம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான் (என்னை காண)
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச்சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால் (என்னை காண)
Wednesday, July 23, 2008
என்னை காணவில்லையே - காதல் தேசம்
Labels:
அப்பாஸ்,
எஸ் பி பாலா,
ஏ ஆர் ரஹ்மான்,
சிங்கப்பூர் ரபி,
தபு,
வாலி,
வினீத்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment