Thursday, May 29, 2008

காதலுக்கு கண்கள் - சந்தோஷ் சுப்ரமணியம்

காதல் எப்படி வருகிறது?
யோசித்தாலும் சொல்வது கடினம்.
தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும்
எவரையும் புரட்டி போட்டு விட காதலுக்கு முடியும்.
காதலில் விழ மாட்டேன் என வீராப்பில் இருந்தவர்களை எல்லாம்
பல காலம் காதலிக்காக தவம் கடந்த கதைகள் ஏராளம்..

Tuesday, May 20, 2008

செந்தூரப்பூவே - 16 வயதினிலே

பருவ வயதில் ஏற்படும் மாற்றங்கள் அலாதியானவை
சில சொல்ல கூடியவை
சில ரசிப்பதற்கு மட்டுமே உரித்தானவை.

ஏக்கங்கள். எதிர்பார்ப்புகள்.. என
அதில் பல உணர்ச்சிகள் அடங்கும்.
இதற்கு ஆண் பெண் என விதி விலக்கில்லை
அதில் மிக முக்கியமானது வாழ்க்கை துணையை பற்றியது

இங்கே ஒரு இளம் பெண் தன் துணைவனை தேடுகிறாள்.
ரசித்து மகிழுங்கள்..

Saturday, May 17, 2008

ராமனா பொறந்தாலும் - சாது மிரண்டால்

காசு தான் கடவுளடா
அது கடவுளுக்கே தெரியும்டா
உலகத்தில் வாழ காசு அவசியம்.
ஆனால் அதுவே போதுமானதா என்றால் அது சந்தேகம் தான்.
அப்புறம் எதற்கு இந்த பாடலை தேர்வு செஞ்சே என்றுதானே கேட்கிறீர்கள்
என்னை விட, என்னை கவர்ந்தவரை கவர்ந்த பாடல்.

Friday, May 16, 2008

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று.. - கேப்டன் மகள்

காதல் வந்தால் எதுவும் இனிமையாத தோன்றும்.
அப்படியிருக்க காதலி ..
சொல்லவா வேண்டும்.
அவளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பிற்கு காரணம் என்ன?
கேட்டால் சொல்வார்கள் எதோ ஒன்று, சொன்னால் புரியாது என்பார்கள்.
உண்மையில் அவர்களுக்கும் காரணம் தெரியாது.
அதுதான் காதலின் மகிமை..

Monday, May 12, 2008

துளி துளியாய் - பார்வை ஒன்று போதுமே

மழையில் நனையும் சுகம் எவ்வளவு இனிமையானது..
வார்த்தையில் வர்ணிக்க இயலாதது.
ஒரு பெண்ணிடம் ஏற்படும் காதலும் அப்படித்தான்.
ஒரு சின்ன பார்வை ஒன்று போதும்.
உனக்குள் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்த.



Friday, May 9, 2008

அக்கம் பக்கம் - கிரீடம்

காதல் - ஒரு இனிமையான அனுபவம்.
அதை நன்கு கொண்டாட தனிமை மிகவும் அவசியம்.
ஆனால் அது கிடைக்காமல் போனால் -
அப்புறம் இப்படி தான் பாட நேரிடும்.




பாடல் வரிகள்.
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி..
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒண்ணு கலக்கின்றதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னாலின்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

நானா... நானா.. நானா நானா...
நானா... நானா.. நானா நானா...