Friday, October 10, 2008

பொன் வானம் - இன்று நீ நாளை நான்

தனிமை கொடுமையானது. அதிலும் இளமையில் தனிமை மிகவும் கொடுமையானது. எல்லாம் இருந்தும் சூழ்நிலையின் கைதியாக விதவையாக வாழும் பெண்ணின் என்ன ஓட்டங்கள் தான் இந்த பாடல்.

அருமையான மழையின் பின்னணி இசையோடு , ஒரு பெண்ணின் ஏக்கத்தை அழாகாக தன் குரலில் கொண்டு வந்து ஜானகி பாடும் இனிய கீதம். "தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ" என்று கேட்கும்பொழுதே அந்த சோகம் நம்மில் தொற்றிக்கொல்லுகிறது.


பாடல் வரிகள்

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா...

No comments: