Tuesday, February 17, 2009

உன் நெஞ்சை தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா

சில பாடல் நமக்கு அவ்வளவாக பிடிக்காது.
ஆனால் திடீரென்று கேட்க்கும்பொழுது சில காரணங்களால், நமக்கு மிகவும் பிடித்து விடும். இந்த பாடலும் அப்படிதான்..
நீங்க என்னா நெனைக்கிறீங்க?

சில காரணங்களால் படத்தில் இடம் பெறாமல் போன ஒரு நல்ல பாடல்.

பாடல் வரிகள்

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

தண்ணி குள்ளே முக்குளிச்சு
முத்து ஒண்ணு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலில சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குதம்மா
சாமியும் தான் இருக்கு இங்கே
வேடிக்கை தான் நடக்குதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா ?

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

தாகதிலே சிப்பி ஒண்ணு
தண்ணிக் குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர் குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பளைங்க இங்கில்லையா
ஆயிரமும் உனக்கிணையா?
எனக்கு அது வழிதுணையா?
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலை சொல்லு

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?

No comments: