காதல் என்பது பலருக்கு பலவிதமாக வரும். ஆனால் அதற்க்கு மூல பொருளாக இருப்பது கண்கள் தான். அதை யாராலும் மறுக்க இயலாது. அப்படி காதலின் கண்களால் கட்டி இழுக்கப்பட்ட காதலனின் பாடல்.
புது பாடல்களெல்லாம் குத்து பாடலை நோக்கி செல்லும் இந்த நேரத்தில் மனதை தென்றலாய் வருடும் ஒரு அருமையான பாடல்.
Wednesday, August 27, 2008
கண்களிரண்டால் - சுப்ரமணியபுரம்
ராதை மனதில் - சிநேகிதியே
சில பாடல்களுக்கு முகவரி தேவையில்லை. கேட்டவுடன் காரணம் தெரியாமல் மனதை கொள்ளையடித்து விடும். அது போன்ற பாடலில் இதுவும் ஒன்று. காரணம் வித்யாசாகரின் துடிப்பான இசையா? இனிமையான சித்ராவின் குரலா?அற்புதமான நடனங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் காட்சியா? நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (2)
கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காதில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒதுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில்...)
கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
காதை இறந்து விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைத்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்தது விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
(ராதை மனதில்...)
கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியதும் கண்ணன் இல்லை வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காதில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியாய் எங்கு கண்டு பிடிப்பாள்
விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கை நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
(ராதை மனதில்...)
Monday, August 25, 2008
என் வானிலே - ஜானி
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எத்தனயோ ஆண்கள் நட்சத்திரங்களாக வரலாம். ஆனால் அந்த இனிய வானில் காதலனாக, அவள் மனம் கவர்ந்த கள்வனாக ஒருவன்தான் வெண்ணிலாவாக வர இயலும்.
அப்படி இருக்கவேண்டும் என்றால் அவளின் பெண்மை நீரோடை போல சுத்தமாக தெளிந்து இருக்க வேண்டும். எக்காலத்திற்கும் பொருந்தும் கண்ணதாசனின் இனிய வரிகள். ஜென்சியின் இனிய குரலில் மனதை சுண்டி இழுக்கும் பாடல்.
Thursday, August 21, 2008
உப்பு கல்லு - கருப்பசாமி குத்தகைதாரர்
காதல் எப்பொழுது வரும், யாருடன் வரும் என்று யாருக்கும் தெரியாது. காதல் கவுரவம் பார்க்காதது. காலம் தாண்டி, தேசம் தாண்டி எங்கும் பரவக்கூடியது. அதனால்தான் இப்பொழுதெல்லாம் ஈ மெயில் காதல், இன்டர்நெட் காதல் என வளர்ந்துள்ளது. அதற்க்கு எந்த வரைமுறையும் கிடையாது.
ஆனால் ஒரு உப்பு கல்லு தண்ணீரை தேடினால் என்ன ஆகும்?
பாம்பே ஜெயஸ்ரீயின் இனிய குரலில் ஒரு உணர்ச்சிகரமான பாடல்.
Wednesday, August 13, 2008
ஒ சென்யோரிடா - பூவெல்லாம் கேட்டுப்பார்
காதல் வந்தால் காதலி ஒரு சாதாரண பிகர் ஆக இருந்தால் கூட ஒரு தேவதை போல தெரிவாள். ஆனால் அவள் ஒரு அழகியாக இருந்து விட்டால் சொல்லத்தான் வார்த்தை கிடைக்குமா?
அதனால் தான் அவளது மூச்சு காற்று கூட சிறந்த இசையாக உள்ளது சாதாரணமாக அசையும் அவளது கூந்தல் கூட அருமையான நடனமாக தெரிகிறதாம்.
ராஜு சுந்தரத்தின் அழகிய நடனத்தில் ஒரு இனிய பாடல்.
Thursday, August 7, 2008
தென்மேற்கு பருவ காற்று - கருத்தம்மா
கன்னி அவள் மேல் காதல் கொண்டால் இந்த பூமியே சொர்க்கமாகும்..
அப்பொழுது காணும் காட்ச்சிகலேல்லாம் அவளாக உரு மாற்றம் பெரும். அதனால் தான் இந்த காதலனுக்கு வானத்திலோ புமியிலோ இல்லாத வண்ணங்கலேல்லாம் காதலியிடம் பார்த்து விடுகிறான்.
ஏ ஆர் ரஹ்மானின் இனிய இசையில் ஒரு இனிய பாடல்